Wednesday, May 23, 2012

தாண்டவப் பொழுதுகள்

தட்டி தட்டி திறக்கப்படாமலிருக்க
முட்டிக்கொண்டு வருகின்றன
உணர்வறைகள்.

எட்டி பிடிக்க முடியா
எத்தனையோ விடயங்கள்
என் காலடியில் கிடக்க
முடங்கி கிடக்கின்றன
முன்பொருநாள் தொலைத்த
என் உன்னத நிலைகள்.

காரணங்கள் அனைத்தும்
களவாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன
பொய்மை என் வாசலில்
விரல் பதிக்கும் வேளையில்.

கட்டுப்பட்டு கிடக்கிறேன்
கயிற்றினுள் பம்பரமாய்
சுழல வைக்கும் ரகசியம்
உன்னிலிருந்து விடுபடும்வரை ...