Thursday, April 2, 2009

பட்டாம்பூச்சி விருது பெருமைப்படும் அந்த மூன்று நபர்கள்

எழுத்துலகில் மோகம் கொள்வோரின்,வடிகாலாய் அமைந்து வரும் இந்த பதிவுலகம்,எண்ணற்ற திறமையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது என்று சொல்வதில் மிகை ஏதும் இல்லை.

அவ்வுலகத்தில் நானும் உலாவிக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கையில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு..


சரி..விஷயத்துக்கு வருகிறேன்..முதலில், ஏப்ரல் ஒன்றாம் தேதியன்று(என்னை ஏமாற்றாமல்) எனக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்த நண்பர் அகநாழிகை(பொன்.வாசுதேவன்) அவர்களுக்கு நன்றி....

அதை,நான் யாராவது மூன்று பேருக்கு தரனுமாமே....தந்துட்டா போச்சு..(இதுல வேற “கரப்பான்பூச்சி” விருது வேற ஒண்ணு வந்துருக்காமே)...



முதலில் வால் பையன் என்ற அருண்.இவரை பற்றி நான் சொல்ல தேவையில்லை..என்னை விட உங்களுக்கே அவரை பற்றி நிறைய தெரியும்..2007 ல் இருந்து எழுதி வருகிறார்..அம்மாடியோவ்...அவருடைய படைப்புகளின் பகுதி தொகுப்பே 50 கிட்ட இருக்கும்..



இரண்டாவதாக தமிழ்குருவி(சாதிக் அலி)-2008 ல் இருந்து எழுதுகிறார் .இவருடைய பதிவுகளில் நிறைய அறிவியல் சார்ந்த்தாகவே இருக்கும்.அழகாக அறிவியலை புரியவைத்து இருப்பார்.



மூன்றாவதாக, என் உயிரே (அபு அப்ஸர்)-இவரும் 2008ல் இருந்து எழுதி வருகிறார்.அழகான படங்களின் மூலம் நிறைய விசயங்களை விளக்கி இருப்பார்.


பட்டாம்பூச்சி விருது பெற்ற இம்மூவருக்கும் எனது வாழ்த்துக்கள்..இதை எப்படி உங்களது ப்ளாக்கில் இணைக்க வேண்டும் என்பதை இங்கே சென்று தெரிந்து கொள்ளுங்கள்.(நன்றி சுரேஷ்)



25 comments:

நட்புடன் ஜமால் said...

பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

நட்புடன் ஜமால் said...

எழுத்துலகில் மோகம் கொள்வோரின்,வடிகாலாய் அமைந்து வரும் இந்த பதிவுலகம்,எண்ணற்ற திறமையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது என்று சொல்வதில் மிகை ஏதும் இல்லை.\\

அற்புதம் ...

Rajeswari said...

வாங்க ஜமால் சார்..(அப்பா..இந்த தடவை விட்டு போகல)

கார்த்திகைப் பாண்டியன் said...

விருது கொடுத்த உங்களுக்கும்.. வாங்குன மக்களுக்கும் வாழ்த்துக்கள்.. நானும் இப்போத்தான் பட்டாம்பூச்சிய பறக்க விட்டுட்டேன் வரேன் தோழி..

Rajeswari said...

வாங்க கார்த்திகை பாண்டியன்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வாழ்த்துகள்

அப்பாவி முரு said...

ராஜேஷ்வரிக்கு கொடுத்தவர்க்கும்.,

ராஜேஷ்வரியிடம் பட்டாம் பூச்சி பெற்றவர்களுக்கும் வாழ்(ல்)த்துக்கள்.

அகநாழிகை said...

அனைவருக்கும் வாழ்த்துகள்

Sasirekha Ramachandran said...

congrats!!

வேத்தியன் said...

விருது கொடுத்தவருக்கும் பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்...

ஆதவா said...

வாழ்த்துகள் டீச்சர்...

((கரப்பான் பூச்சி எல்லாம் கொஞ்சம் ஓவர்!!! அது மற்ற பதிவர்களை இழிவுபடுத்தும் செயல்!!!))

மூவருக்கும் வாழ்த்துகள்

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள் தங்கச்சி ராஜராஜேஸ்வரி.

விருதுகள் பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

Sathik Ali said...

எனக்கு ஒரு பட்டாம் பூச்சியை அன்பளித்த உங்களுக்கு நன்றி."எல்லாப் புகழும்- கடவுளுக்கே".

தமிழ் அமுதன் said...

வாழ்த்துக்கள் டீச்சர்!!!

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள்

தமிழ் மதுரம் said...

வாழ்த்துக்கள் சகோதரி...!


தொடர்ந்தும் நிறைய எழுதுங்கள்!

தமிழ் மதுரம் said...

பள்ளிகள் ஓர் அனுபவப்பாடம் //

இதன் மிகுதி எப்போது வரும்???? விரைவில் பதிவிடுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்!

Rajeswari said...

கமல் said...
பள்ளிகள் ஓர் அனுபவப்பாடம் //

இதன் மிகுதி எப்போது வரும்???? விரைவில் பதிவிடுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்!//

நன்றி கமல்...விரைவில் அடுத்த பாகம் வரும்,

வால்பையன் said...

மிக்க நன்றி தோழி!
உங்கள் அன்பை அன்புடன் பெற்று கொண்டேன்!

இணைக்க தெரியாமல் இருந்தேன்!
நீங்கள் கொடுத்த லிங்கின் மூலம் தெரிந்து கொண்டேன். இணைத்து விடுகிறேன்

coolzkarthi said...

அக்கா வாழ்த்துக்கள்.....

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள் ராஜேஸ்!!!
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்!

தேவன் மாயம் said...

தவறாமல் என் தளம் வரும் உங்களுக்கு என் நன்றி!!

குடந்தை அன்புமணி said...

விருது கொடுத்தவருக்கும், பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

ராம்.CM said...

அனைவருக்கும் வாழ்த்துகள்...

நான் உங்க‌ளுக்கு கொடுக்க‌வேண்டும் என‌ நினைத்தேன்.. அத‌ற்குள் அக‌ந‌ழிகை முந்திவிட்டார்.ஸாரிபா...

அப்துல்மாலிக் said...

எனக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்து வாழ்த்தும் தெரிவித்து கவுரவப்படுத்தியதற்கு மிக்க நன்றி தோழி.....