Showing posts with label அனுபவங்கள். Show all posts
Showing posts with label அனுபவங்கள். Show all posts

Tuesday, February 17, 2009

கொசுவத்தி ஒன்னு


பால்வாடி பத்தி உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்,,அதாங்க இந்த LKG UKG க்கு பதிலா படிக்கிறது .அங்க தாங்க நானும் பாண்டியும் படிச்சோம் .அங்கல்லாம் காலையில ஒன்பதுல இருந்து பத்துக்குள்ள போனா போதும் . ப்ரெயெர் பாடி முடிச்சுருந்தாலும் சரி ,ப்ரெயெர் பாடிக்கிட்டே இருந்தாலும் சரி ,லேட் கம்மர்னு வெளில நிக்கல்லாம் விடமாட்டாங்க

.பாண்டிக்கு அம்மா அப்பா இல்லாததனால அவன் பால்வாடிக்குள்ளயே இருக்கிற பாய்ஸ் ஹாஸ்டலில் தங்கி இருந்தான்.நானும் பாண்டியும் ரொம்ப திக் பிரெண்ட்ஸ் .ஒரே வரிசையில் தான் உட்காருவோம் .என்ன மாதிரியே அவனும் ரொம்ப நல்லா படிப்பான்.நாங்க ரெண்டு பேரும் நல்லா படிக்கிறதால ,எங்க நாகா டீச்சர் எங்களுக்கு மட்டும் ரெண்டுரவுண்டு மால்டோ தருவாங்க . .சூப்பரா இருக்கும் ..(அதுக்காகவே அடம் புடிக்காம ஸ்கூலுக்கு போய்டுவேன் )  

லஞ்சுக்கு சத்து மாவோ ,கீரைகுழம்பு சோறோ தருவாங்க ..லஞ்சு முடிஞ்சதுமேதான் நல்லா இருக்கும் ..ஒவ்வொருத்தரையா எந்துருச்சு ரைம்ஸ் பாட சொல்லுவாங்க..என் டேர்ன் எப்ப வரும்னு ரொம்ப ஈகரா வெயிட் பண்ணிட்டு இருப்பேன் .ஏனா என் குரல் நல்லா இருக்குன்னு பாண்டி சொல்லிருக்கான் .என்னோட பேவேரிட் பாட்டு என்னனு தெரியுமா ? இதோ.. 

  "குத்தடி குத்தடி ஜெயினக்கா
குனிஞ்சு குத்தடி ஜெயினக்கா
பந்தலிலே பாவக்கா
தொங்குதடி டோலக்கு
பையன் வரான் பாத்துக்கோ
பணம் கொடுத்தா வாங்கிக்கோ
சில்லறைய மாத்திக்கோ 
சிலுக்கு பையில போட்டுக்கோ 
சிலுக்கு சிலுக்கு ஆட்டிக்கோ "

அப்பறம் நல்ல ஓடி ஆடி விளையாண்டதுக்கு அப்பறம் ரெண்டு மணிப்போல தூங்க சொல்லுவாங்க ..மூணு மணிப்போல எங்க அக்கா என்ன கூப்பிட வரும்போது ,ரெண்டு கைகளையும் பைசா ரொட்டி (குட்டி குட்டி பிஸ்கட் )வச்சு எங்க டீச்சர் அனுப்பி விடுவாங்க ..இப்படியே நல்லா போயிட்டு இருந்துதுங்க ..ஒருநாள் எங்க டீச்சர் எனக்கு புது ப்ளூ பாவடையும் வெள்ளை சட்டையும் கொடுத்து ,கலெக்டர் ஆபிஸ் போகப்போறதால நாளைக்கி வரும்போது நான் போட்டுட்டு வரணும்னு எங்க அக்காகிட்ட சொல்லி அனுப்பிச்சாங்க .. நானும் பக்கவா கிளம்பி போய் நின்னா ..அட பாண்டியா அது புது டவுசர் சட்டை போட்டு ..அப்பறம் ஜாலியா ஜீப்ல ஏறி கிளம்பினோம் .

 முதல் தடவையா ஜீப் ட்ராவல் ..கலெக்டர் ஆபிஸ் போனதுக்கு அப்பறமா ,உள்ள எதோ ஒரு ரூமுக்கு என்னையும் பாண்டியையும் கூப்பிட்டு போனாங்க ..எங்கள மாதிரியே அங்க நிறைய பசங்க ..கொஞ்ச நேரம் கலுச்சு ஒரு பெரிய அம்மா கிப்பி வச்சுக்கிட்டு ,நாங்க இருந்த ரூமுக்குள்ள நொலஞ்சாங்க ..எனக்கு அவங்கள எங்கேயோ பாத்த மாதிரி இருக்குதேனு
யோசிகிறதுக்குள்ள எனக்கு நியூட்ரின் சாக்லட் கொடுத்து என்னை தூக்கி வச்சுகிட்டாங்க ..அப்பறம் தான் எனக்கு ஞாபகம் வந்தது ..அவங்க எங்க வீட்ல ஒரு போட்டோல இருக்கிற ஒரு அம்மானு...  

 .சிறிது நேரத்திற்கு அப்பறம் மறுபடியும் ஜீப் ட்ராவல் டூ வீடு.ஜீப் விட்டு இறங்கினவுடனே பாண்டிக்கு ஒரு பை சொல்லிட்டு வீட்ல போய் எங்க அப்பாகிட்ட யாருப்பா அந்த அம்மானு கேட்டேன் ,போட்டோவ காண்பிச்சு ..அவங்கதான் நம்ம பிரதமர் இந்திரா காந்தினு சொன்னாரு,அப்படியானுட்டு விளையாடப்போயிட்டேன் .

அப்படியே எப்போவும் போல ஜாலியா ஸ்கூலுக்கு போயிட்டு இருந்தேன் ..ஆனா ஒருநாள்
நானும் எங்க அக்காவும் போனப்ப பாண்டி யார்கூடயோ ,பெரிய பையெல்லாம் வச்சு நின்னுக்கிட்டு இருந்தான் ..என்னடா கிளாஸ்க்கு போகாம இங்க நிக்கிறேன்னு கேட்டேன் ..நான் வேற ஊருக்கு போறேன் .,டாட்டா அப்படின்னு சொல்லிக்கிட்டே அழுக ஆரம்பிச்சுட்டான் ..எனக்கும் அழுக அழுகையா வந்துடுச்சு ..போகாத பாண்டி ,போகாத பாண்டின்னு சொல்லி ,தரயில பொரண்டு அழுதேன் .எங்க டீச்சர்லாம் வந்து என்னைய தூக்கி விட்டாங்க .பாண்டி திரும்ப வந்துடுவான்னு சொன்னாங்க ..பாண்டியும் சொன்னான் ,நான் கண்டிப்பா வந்து உன்னை பார்பேன்னு ...ஆனா இன்னும் வரல .

நீங்க யாராவது பாண்டியா ????




..




Monday, February 16, 2009

என்ன கொடுமை சார் இது

அது ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரம் ...
சுதந்திர தின லீவிற்க்காக சொந்த ஊர் மதுரை சென்றிருந்தேன்.எவ்வளவுதான் சென்னையில் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் ,உறவுகளோடு சொந்த ஊரில் இருப்பதே ஒரு தனி சுகந்தாங்க ...! நேரத்திற்கு சுவையா அம்மா கையாள சாப்பிட்டு ,கோவில் குளம்னு சுத்திட்டு,லோக்கல் தியேட்டருக்கு போயி ,ஓடாத படத்த பாத்துட்டு ,............ம்ம்ம்ம் ...சரி விடுங்க ! சொல்ல வந்த விசயத்த விட்டுட்டு எங்கோ போயிட்டேன் ..லீவ் முடிஞ்சு சென்னை திரும்புறதுக்காக ,நிம்மதியா வரலாமுன்னு KPN ல AC கோச்ல பெர்த் புக் பண்ணியிருந்தேன்..அது என்னனு தெரியல, இங்கருந்து அங்க போகுரதுக்கும் சரி ,அங்க இருந்து இங்க வரதுக்கும் சரி , ரயிலில் டிக்கெட்டே கிடைக்க மாட்டேங்குது சாமி ...நான் புக் பண்ணுனா மட்டும் வெய்ட்டிங் லிஸ்ட்ல இருக்கா ..இல்ல என்னோட லாகின் நேமுக்கு மட்டும் டிக்கெட் தரமாட்டான்களோ என்னமோ தெரியல ..
எட்டரைக்கு பஸ் பெரியாரில் இருந்து கிளம்புச்சு ...கிளம்பும்போது நல்லா எலுமிச்சம்பழம்,பத்திலாம் வச்சு ,ஒரு பூசைய போட்டு தாம்ப்பா கிளப்புனாங்க ..வண்டில ஏறுனதுமே என்னோட பெர்த்ல போய் படுத்துக்கிட்டேன் ..ஒரு ரெண்டு நிமிஷம் போயிருக்கும் ,ஏதோ மிஸ் ஆகுற மாதிரியே இருந்தது ..எனக்கு மட்டும் இல்ல ..பஸ்ல இருந்த எல்லோருக்குமே ...என்னனு பாத்த பஸ்ல AC இல்ல ..இதுல இன்னொரு கொடுமை என்னன்னா கீழ இருக்கவங்களுக்காவது ஜன்னல் இருந்தது ..மேல பெர்த்ல முழுசா கண்ணாடி போட்டு மூடிவச்சுனுட்டானுங்க ..ஒரு அரைமணி நேரம் உள்ள உட்கார்ந்திருந்தோம் ,அடுத்த நாள் குளிக்கிற வேலை குறைஞ்சிருக்கும் . சரின்னு டிரைவர் அங்கிள் கிட்ட போய் ,அங்கிள் அங்கிள் AC வொர்க் ஆக மாட்டேன்குதுனு சொல்ல ,அது அப்படிதான்னு அவர் சொல்ல, அப்பறம் நாங்களே வண்டிய போலீஸ் நிலையத்திருக்கு விட்டோம்.வேற பஸ் அரேன்ச் பண்ணி தரச்சொல்லி கம்ப்ளைன் கொடுக்க ஆச்சு மணி 10 . ஆனா வண்டி இன்னும் மாட்டுதாவனியவே டச் பண்ணல ...இது சில பேர் வீட்டுக்கே போறோம்னு சொல்லி நடைய கட்டிடாங்க..என்னடா செய்யிறதுன்னு பேந்த பேந்த போலீஸ் ஸ்டேசன் வாசலிலே ஒரு மணிநேரமா வெயிட் பண்ணினோம் ..வந்ததுங்க ஒரு வண்டி (வேன் )..பழைய இய்யம் பித்தாளைக்கு பேரிச்சம்பழம் கணக்கா ! சரி ஜன்னல் இருக்கு ,காத்தாவது வரும்னு சொல்லி ஏறி உக்காந்து "போவோமா ஊர்கோலம்னு" கிளம்பினோம். மாட்டுத்தாவணி வந்து சேர மணி ஆச்சு 11.30....ஒன் போரவங்கல்லாம் போயிட்டு வாங்கன்னு டிரைவர் அங்கிள் சொன்னாரு..சரின்னு போயிட்டு வந்துட்டு வண்டில ஏறி உட்கார்ந்தா ,வண்டி கிளம்பவே இல்ல ..என்னனு விசாரிச்சா ,டிக்கெட்( புதுசாஆள் ) போட்டுட்டு தான் கிளப்புவங்கலாம்..சரி வண்டி கொஞ்சம் ப்ரியாத்தானே இருக்குன்னு வெயிட் பண்ணோம் . பண்ணோம் ....பண்ணோம் 12.15 வரை. அப்புறம் பொறுமை தாங்க முடியாம டிரைவர் அங்கிள் கிட்ட போய் கேட்டா ,போட்டாரு பாருங்க ஒரு குண்ட ! "வண்டி சென்னை போகதுன்னு" ..அடப்பாவிகளா AC பஸ்னு சொல்லி ஏமாத்தி , 450 ரூபாயை ஓட்ட வண்டிக்கு அழுது,எப்படியாவது அடுத்த நாள் வேலைக்கு போயீரலமுனு நெனச்சா ,இப்புடி கவுத்து விடுவாங்கன்னு நினைக்கவே இல்லேங்க,,காரணம் கேட்டா ,டிக்கெட் (ஆள் )ஏதும் புதுசா ஏறல ,அதான் என்றார் பாருங்க ...காதுக்குள்ள சொஈங் ......சத்தந்தாங்க கேட்டுச்சு ..."சரி நாங்க எப்படி போறது?" என்று கேட்டா, "வேற வண்டி புடிச்சு போங்கன்னு" சொல்லிடாரு ரொம்ப கூலா ...உங்க மேல கேஸ் போடுவோம் அது இதுனு சொல்லியும் ம்ம்ஹும்...எதும் நடக்கல ..
ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ணி இருந்ததாலே டிக்கெட் காசும் கிடைக்கல ..கையில அப்பா அம்மா ஆசிர்வாதம் பண்ணி கொடுத்த 200 ரூபாய்தான் இருந்தது. (நமகெல்லாம் டெபிட் கார்டு தானே ஸ்டைல் ) ஒரே குழப்பம் வீட்டுக்கே போய்டுவோமா அல்லது எதாவது பஸ்ல அடுச்சு புதுசு போய்டலாம்னு ..அப்புறம் தெய்வமா ஒரு டெம்போ வேன் டெலிவரிக்காக (TCS )சென்னை புறப்பட்டுச்சு ..அவங்ககிட்ட பேசி ,வண்டில ஏறி உட்கார்ந்தேன் ..சே எப்படிலாம் நிம்மதியா வரணும்னு நினைச்சு AC ல புக் பண்ணி இப்போ இப்படி டிராவல் பன்ன்றோமேனு நெனச்சுகிட்டே தூங்கிட்டேன். சும்மா சொல்லக்கூடாதுங்க .சரியா காலை 10 மணிக்கெல்லாம் சென்னை வந்துட்டேன்,, அப்பறம் என்ன நடந்திருக்குமுன்னு உங்களுக்கே தெரியுமே ..ஒரு ஹாப் டே லீவ் போட்டுட்டு நிம்மதியா தூங்கினேன் ..