Monday, March 8, 2010

தனிமையைத் தேடி...



அரிதாகிவிட்ட உன் அண்மைகளால்
என் நாட்குறிப்புகள்
தழும்பேறிக்கொண்டிருக்கின்றன.

அடிக்கடி தொலைந்து போய் விடுவாய் எனத்தெரிந்தும்
என் வீட்டுச்சாளரங்களை திறந்து விடுகிறேன்.

உன்னுடனான ரகசிய தொடர்புகளை பத்திரமாய்
என் படுக்கையின் அடியில் பதுக்கி வைத்துள்ளேன்
என்றேனும் எழுந்து வந்து
கடிகார முள் சப்தத்துடன் என்னை ஆளமாட்டாயா என்று .

உலராத நினைவுகளின் வாசனை
என் வீட்டு செம்பருத்தி இலையின் பச்சையமாக இருக்கிறது.
உன்னிருப்பை உணர்த்தும்போது..

என்னுள் என்னை பார்க்கும் தருணங்கள்
நிரம்பிக்கிடக்கின்றன..
நீ என்னை பார்க்கும் வேளையில்..

என்னுடனான மற்றவரின் தொடர்புகள்
எல்லையை விட்டு நகர்ந்து செல்கின்றன
உன் இருத்தலை பொருட்டு..

இதோ இன்னும் சற்று நேரத்தில்
என் அகத்தை விட்டு
வெளியேறிவிடுவாய்...

அக்கணங்களில்
தொலைந்து போவது
நீ மட்டுமல்ல
நானும்தான்...

இந்த வார உயிரோசையில் எனது கவிதை.






25 comments:

பத்மா said...

என்னுள் என்னை பார்க்கும் தருணங்கள்
நிரம்பிக்கிடக்கின்றன..
நீ என்னை பார்க்கும் வேளையில்..

ஆஹா என்னை நீ பார்க்க என்னில் நான் பார்க்க பார்வைகளால் நீ நான் ஆனாய் நானும் நானானேன் .ஆயின் நாம் நாமோனோம்

Rajeswari said...

//ஆஹா என்னை நீ பார்க்க என்னில் நான் பார்க்க பார்வைகளால் நீ நான் ஆனாய் நானும் நானானேன் .ஆயின் நாம் நாமோனோம்
//

ஆஹா இதுவும் நல்லா இருக்கே...

நட்புடன் ஜமால் said...

உயிரோசைக்கு வாழ்த்துகள்!

தனிமைய தேடுறீங்களா ஏன் ஏன் ஏன்

[[என்றேனும் எழுந்து வந்துகடிகார முள் சப்தத்துடன் என்னை ஆளமாட்டாயா என்று .]]

ரொமாண்ட்டிக் ...

ம்ம்ம் ...

நட்புடன் ஜமால் said...

பத்மா சொன்னதும் அழகாயிறுக்கு

நட்புடன் ஜமால் said...

நீ என்னை பார்க்கும் வேளையில்..
என்னுடனான மற்றவரின் தொடர்புகள்எல்லையை விட்டு நகர்ந்து செல்கின்றன]]

ஓஹ்! அதானா :P

பத்மா said...

நன்றி ஜமால்:)

பத்மா said...

thanks raji

VISA said...

//என்னுள் என்னை பார்க்கும் தருணங்கள்
நிரம்பிக்கிடக்கின்றன..
நீ என்னை பார்க்கும் வேளையில்..//

ரசனை!!!

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்.

DREAMER said...

அருமையான கவிதை...

-
DREAMER

அப்துல்மாலிக் said...

வாழ்த்துக்கள் உயிரோசைக்கு

ஏதோ தேடல் தெரியுது, அருமை

அன்புடன் அருணா said...

உயிரோசைக்கு வாழ்த்துகள்!

prince said...

(உள்ளக் குமுறல்கள் அலைஸ்) கவிதை -அருமை
♫ THE WORST IN LIFE IS "ATTACHMENT " IT HURTS WHEN YOU LOSE IT. THE BEST THING IN LIFE IS " LONELINESS " BECAUSE IT TEACHES YOU EVERYTHING AND, WHEN YOU LOSE IT, YOU GET EVERYTHING.

Dr.Rudhran said...

a good piece

creativemani said...

BEAUuuuuuuutiful

என் பெயர் உன் தாய்மொழி said...

வலைப்பதிவில் நான் படித்த முதல் கவிதை...
வருடியது என் நெஞ்சை......
விம்பியது என் உள்ளம்......
வீசியதா இந்தக் காதல் வாசம் உங்கள் வழ்வில்??

Thamira said...

நீங்கள் ரசனைக்காரி..

தமிழ் மதுரம் said...

உன்னுடனான ரகசிய தொடர்புகளை பத்திரமாய்
என் படுக்கையின் அடியில் பதுக்கி வைத்துள்ளேன்
என்றேனும் எழுந்து வந்து
கடிகார முள் சப்தத்துடன் என்னை ஆளமாட்டாயா என்று//



என்ன அருமையான கற்பனை லயம்.... இந்த வரிகள் தான் என்னைப் பொ்றுத்த வரை தங்களின் கவிதைக்கு அணி சேர்க்கின்றன....
கவிதை தனிமை கலந்த ஏக்கத்தின் வெளிப்பாடு...!

GNU அன்வர் said...

நல்ல கவிதை வாழ்த்துகள்

நிலாரசிகன் said...

வாழ்த்துகள் :)

Ram kumar said...

nice kavithai ...... i like it .. and this is about love :) i meet u in bloggers meet.......

Anonymous said...

வர்ணனை பூசாத வார்த்தகள், உங்களை எனக்கு அறிமுகப்படுத்துகின்றன...
வாழ்த்துக்கள்...

"உழவன்" "Uzhavan" said...

நல்ல கவிதை.. உயிரோசைக்கு வாழ்த்துகள்

ரிஷபன் said...

என்னுள் என்னை பார்க்கும் தருணங்கள்
நிரம்பிக்கிடக்கின்றன..
நீ என்னை பார்க்கும் வேளையில்..

ஆஹா...
உயிரோசை பிரசுரத்திற்கு வாழ்த்துகள்.

Dino LA said...

அருமை