Wednesday, June 17, 2009

காத்திருப்பேன் உனக்காக..!


வித்திட்ட விதை எல்லாம்
உன் பேர் சொல்ல
திக்கற்று நிற்கிறேன்
நானிங்கே..
காயத்தை மட்டும்
தந்த நீ
ஏன் களிம்பை தர மறுக்கிறாய்
ஊமைக்கனவுகளுக்கு
எப்பொழுது
உயிர் தரப்போகிறாய்.
உன் நினைவுகளில்
என் வார்த்தைகள்
கூட மயங்கி விட்டன
அதனால்தான்
கவிதை கூட
இங்கே வறட்சியாய்..
நான்
உன்னிடத்தில் வந்த போது
என் எதிர்காலத்தையும்....,
உன் கடந்த காலத்தையும்
மறந்து விட்டேன்.
கானலாகிப்போன
காலங்களுக்காக
என்ன செய்வேன் நான்
கண்ணீரை தவிர ..
இமைக்கும் ஒலி கூட
என்னை பயமுறுத்துகிறது
நீ என்னை பிரியும்போது
தனிமையின்
தணலை தாங்கிக்கொண்டு
தள்ளாடும் வயதிலும்
காத்திருப்பேன் உனக்காக..!